×

நாட்டிலேயே முதன் முறையாக டெல்லியில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில்பெட்டிகள்!!!

டெல்லி : கொரோனா பாதிப்புகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சிறப்பு படுக்கை வசதிகளை கொண்ட ரயில் பெட்டிகளை  டெல்லி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரயில்வே வாரியம் அனுப்பியது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவமனைகளும், தனிமை மையங்களும் போதாத நிலை ஏற்பட்டதால்,
 தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது.

அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப் பட்டனர். ரயில்வே சார்பில் 5,321 ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசின் வேண்டுகோளை அடுத்து 160 படுக்கைகளைக் கொண்ட 10 ஏ.சி. இல்லா பெட்டிகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஏ.சி. வசதியுடனான ஒரு பெட்டி மருத்துவர்கள் உள்ளிட்டோரின் ஓய்வறை பயன்பாட்டுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Delhi ,country ,time , Delhi, Isolated, Wards, Railway Boxes, Corona
× RELATED டெல்லியின் முதல்வர் என்ற...