வேலூர்: மதுரை உட்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 247 2ம் நிலை பெண் காவலர்களுக்கும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 384 ஆண் காவலர்களுக்கும் வேலூர் மற்றும் சேவூர் போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நேற்று பயிற்சி தொடங்கியது. தமிழகத்தில் 8 ஆயிரம் 2ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சிப்பள்ளிகளில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 15 நாள் பயிற்சி பெற்ற நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பயிற்சி பெற்றவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 185 பெண்கள் கடந்த சனிக்கிழமை கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.