சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர், மற்றும் ராதாகிருஷ்ணன், பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 15,770ஆக அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.