இஸ்லாமாபாத்: சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் ஓட்டலில் குடும்பத்துடன் அமர்ந்து தேனீர் குடிக்கும் புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (70). ஊழல் வழக்கில் சிக்கிய இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நவாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நலக்குறைவை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்திடம் அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்றனர். இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டதாகவும் அங்கு மருத்துவமனையில் நவாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.