சென்னை: விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.