உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (35) லாரி டிரைவர். இவரது நண்பர் கிளார் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (29). அர்ஜுனன் வீட்டுக்கு சரத்குமார் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதனால் அவரது மனைவிக்கும் சரத்குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அர்ஜுனன் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அர்ஜுனன், கடந்த 30ம் தேதி சரத்குமாரை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் உத்திரமேரூர் அடுத்த சித்தமல்லி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது.