சென்னை: மொட்டை மாடியில் சைக்கிள் ஓட்டியபோது மாஞ்சா நூல் முகத்தில் சிக்கி அறுத்ததில் 3 வயது சிறுவன் படுகாயமடைந்தான். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சூளைமேடு 2வது லேன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர். இவர், அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் மாலை தனது 3 வயது மகன் மோனித்துக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாஞ்சா நூல் பட்டம் சிறுவனின் இடது பக்க முகத்தின் கண் புருவத்திலும், வலது பக்க மூக்கின் மீதும் விழுந்து அறுத்ததால், சிறுவன் முகத்தில் ரத்தம் வழிந்தோடியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், சாதுர்யமாக செயல்பட்டு மகன் முகத்தில் விழுந்த மாஞ்சா நூலை அகற்றினார். பிறகு மகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று சிகிச்சை அளித்தார்.