தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக கோடை மழை தீவிரமாக வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதற்கிடையே அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 தினங்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதிவரை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் 50 கிமீ வேகத்தில் காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: