சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய திருதணிகாசலம் கைது செய்யப்பட்டார். மேலும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதானார். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து தணிகாசலம் சார்பில் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாரம்பரிய மருத்துவம் செய்து வரும் எனக்கு, கடலூர் வருவாய்த்துறை முறையான சான்றிதழ் வழங்கியுள்ளது.