சென்னை: பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலும், ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள இடங்களில் கடந்த 14-ம் தேதி கிழமை முதல் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.