மதுரை: தூய்மை பணியாளர்கள் முகக்கவசம், கையுறை, அரசு தரும் பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்துகிறார்களா என்று மேற்பார்வையாளர் கண்காணிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தூய்மை பணியாளர்கள் முகக்கவசம், கையுறையை அணிய தவறும் பட்சத்தில் அதிகாரியிடம் புகார் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.