டெல்லி: சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சிறு,குறு நிறுவனங்களின் வரையறை மாற்றி அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு,குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.