நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த ஒரு வாரமாக முட்டை விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், என்இசிசி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் விலை 355 காசில் இருந்து, 360 காசாக நிர்ணயிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு உள்ளளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.