கணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்  ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர் பிஜூகுமார். சவுதி  அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமா கோவிந்த்(40). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த  தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிஜூகுமாருடன் அறையில் ஒன்றாக இருந்த ஒருவருக்கு கொரோனா ெதாற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிஜூகுமார்  கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதை அறிந்த பிரேமா கோவிந்த்  மிகுந்த மனக்கவலை அடைந்தார். உடன் பணியாற்றும் ஆசிரியையிடம் தனது கணவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரேமா கோவிந்த் தனது அறையில் தீயில் கருகி இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து நந்தியார் குளங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் மனம்  உடைந்து பிரேமா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: