திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர் பிஜூகுமார். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமா கோவிந்த்(40). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிஜூகுமாருடன் அறையில் ஒன்றாக இருந்த ஒருவருக்கு கொரோனா ெதாற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிஜூகுமார் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.