புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12ம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் 30 சிறப்பு ஏசி ரயில்களுடன், கூடுதலாக 200 பயணிகள் சிறப்பு ரயில்கள் ஜூன் 1 முதல் இயக்கப்படும். ஜூன் ஒன்று முதல் 30 வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்காக இதுவரை 26 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் முதல் நாளில் 1.45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். டிக்கெட் அல்லது ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையம் மற்றும் ரயிலில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.