பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று காலை முதல் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.