புதுடெல்லி: கொரோனா பாதித்த விமானி விவகாரத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் அவர் துன்புறுத்தப்பட்டதாக ஏர் இந்தியா விமானிகள் குற்றம்சாட்டி உள்ளனர். டெல்லியில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நோக்கி நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. உடனடியாக தகவல் தெரிவித்து, விமானம் திருப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமானி கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. அச்சங்கம் ஏர்இந்தியா நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘விமானிக்கு கொரோனா என்றதும், மற்ற சக விமானிகள் அனைவரும் ஒருநாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு கூட தரப்படவில்லை.