சென்னை: தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதி தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ேநற்று அதிகபட்சமாக 1,149 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநருக்கு 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது.