×

அமைச்சர் உதவியாளர், மாநகராட்சி இணை இயக்குநருக்கு கொரோனா: தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் கலக்கம்

சென்னை: தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதி தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ேநற்று அதிகபட்சமாக 1,149 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநருக்கு 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவரும் அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதில் நேற்று அமைச்சர் உதவியாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோய்  தொற்று இருந்தது  உறுதியானது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து அரசு அதிகாரிகள் இதனால் கலக்கமடைந்துள்ளனர்.


Tags : minister ,Corona ,assistant ,corporation , Corona, minister's assistant,corporation director
× RELATED மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி...