ஐகோர்ட்டில் இன்று முதல் 31 அமர்வுகளில் விசாரணை

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் 25 முதல் உயர் நீதிமன்றம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் (ஜூன் 1) சென்னை உயர் நீதிமன்றத்தில் 31 அமர்வுகள் அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்கவுள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை நீதிபதி தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு உள்ளிட்ட 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகள் அமர்வும் ஜூன் 1 முதல் வழக்குகளை விசாரிக்கும். நீதிபதிகள் தங்கள் அறைகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும்.  வக்கீல்கள் தங்கள் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகலாம்.

Related Stories: