டெல்லி: நாடு முழுவதும் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மட்டும் ரயில்களில் 1.45 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 30 வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய 26 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.