×

சென்னையிலிருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம்; கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலுக்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,  படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும்  தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...

* மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை.
* ஓரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை.
* சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்.

* பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி.
* கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
* சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அலுவல் ரீதியாக சென்று 48 மணி நேரத்தில் திரும்பும் நபருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை.
* மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

* வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம்.
* வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாவிட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
* மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தில் இருந்து வருவோருக்கு பரிசோதனை கட்டாயம்.

* வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி.
* கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.


Tags : Chennai Tamil Nadu ,Government ,Nadu ,Coronation Testing and Isolation Coronation Testing and Isolation for the New Protocol , Examination mandatory for everyone from Chennai Tamil Nadu Government to release new protocol for Coronation Testing and Isolation
× RELATED தமிழகத்தில் வாக்குப்பதிவு...