சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம். மேலும் பரிசோதனையில் தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.