போடி: போடி அருகே, அதிமுகவினர் தலையீட்டர் கண்மாய், கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாயை தூர்வாருவதற்காக, கடந்த 20ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டனர். மீனாட்சியம்மன் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள், விவசாயிகள் நேரடி பார்வையில் கடந்த சில நாட்களாக கண்மாயில் மறுகால் பாயும் இடத்திலிருந்து விசுவாசபுரம் செல்லும் கால்வாயை தூர்வாரி, இருபுறமும் கரையை பலப்படுத்தும் பணி நடந்தது. இந்நிலையில், திடீரென தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. இதையறிந்த 400க்கும் மேற்பட்டவர்கள் மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திடலில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.