பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் மகசூல் குறைவால், இளநீர் விலை அதிகரித்துள்ளது. தோட்டங்களில் ரூ.30க்கு கொள்முதல் செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, இன்னும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை தோட்டங்களில் இளநீர் ஒன்று ரூ.19 முதல் அதிகபட்சமாக ரூ.21க்கே கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பின் கோடை வெயிலின் தாக்கத்தால் இளநீருக்கு கிராக்கி அதிகரித்தது. இருப்பினும், மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கால் பல வாரமாக இளநீர் அறுவடை குறைந்ததுடன், விற்பனை மிகவும் மந்தமானதால் இளநீர் விலை உயராமல் இருந்தது.