நத்தம்: நத்தத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நத்தத்தில் யூனியன் அலுவலகம், மீனாட்சிபுரம், பஸ்நிலைய ரவுண்டானா, மூன்றுலாந்தர், அவுட்டர், மெய்யம்பட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, சுண்டக்காய்பட்டி பிரிவு, கொட்டாம்பட்டி செல்லும் சாலை பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலைகள் வழியாக மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் இந்த சாலைகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கால் கார், ஆட்டோ, லாரி, பஸ் போக்குவரத்து இல்லாததால் டூவீலர்களிலே ஏராளமானோர் பயணிக்கின்றனர்.