கொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பு.: மருத்துவமனை அலட்சியத்தால் முதியவர் வீட்டிலே மரணம்

சென்னை: சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர் வீட்டுலே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முதியவரை  ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் இடம் பற்றாக்குறையாக இருப்பதாக கூறி முதியவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நோய் தொற்று உறுதியான 4 மணி நேரத்தில் மூச்சு திணறல் காரணமாக முதியவர் உயிரிழந்துள்ளார். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் விபரீதம் நிகழ்ந்திருக்காது என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் முதியவர் உயிரிழந்துள்ளது புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த முதியவரின் மகன் இதற்கு முன்பிருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: