பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காமாட்சி தெருவை சேர்ந்த 35 வயது நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர், பெரம்பூர் எஸ்.எஸ்.வி கோயில் தெருவை சேர்ந்த தம்பதி, அதே தெருவை சேர்ந்த மாமியார், மருமகள், திருவிக நகர் நாகம்மாள் தெருவில் 2 பேர், திருவிக நகர் 9வது தெருவில் 3 பேர் ஆகியோருக்கு நேற்று நோய் தொற்று ஏற்பட்டது. ஓட்டேரி காவலர் குடியிருப்பை சேர்ந்த 40 வயது தலைமை காவலர், அனுமந்தபுரம் கோயில் தெருவை சேர்ந்த 53 வயது ரயில்வே ஊழியர், புளியந்தோப்பு பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான 28 வயது இளம்பெண், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் சந்தா கார்டன் தெருவை சேர்ந்த 3 பேர், மதுரை தெருவில் ஒருவர், எஸ்.எஸ்.புரம் தெருவில் ஒருவர், சுப்புராயன் 5வது தெருவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் நேற்று ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நர்சுக்கும் பரவியது
தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் செவிலியருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி இருந்ததால,் ரத்த பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.