கோவை: கோவை அருகே இறந்த முயலை வைத்து டிக்-டாக் செய்த 3 இளைஞர்களை வனத்துறையினர் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். ஊரடங்கு காலத்தில் டிக்-டாக் மோகம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த டிக்-டாக் வீடியோக்களில் அதிகளவிலான லைக்குகள் பெறுவதற்காக விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டிக்-டாக் வீடியோவில் இளைஞர்கள் 3 பேர் இறந்த காட்டு முயலை கையில் வைத்து கொண்டு, அதனை நாய்கள் பிடிப்பது போன்ற வீடியோ வெளியிட்டனர். இதனை சென்னையில் பார்த்த வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனத்துறையினர் தேடி வந்தனர்.