சேலம்: சேலம் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், மாஸ்க் அணியாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், சாலைகளில் உலாவும் பலர், முக கவசம் இல்லாமல் சுற்றுவதை காணமுடிகிறது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறுகையில், கொரோனாவில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.