சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காரண மாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் கோயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கோயில்களுக்கு ஏற்றார்போல் ஒரு நாளைக்கு 150 பேர் முதல் 500 பேர் வீதம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். தேசிய தகவல் மையம் மூலம் அறநிலையத்துறை இணையதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.