சென்னை: எம்டிசியில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பிய சுற்றறிக்கை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3,584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளதால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1,775 பேருந்துகளின் எப்சி ஜூன் 2020-க்குள்ளாக முடிவடையவுள்ளது.