சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: 2019ல் மத்தியில் பா.ஜ. தலைமையில் மோடி பிரதமராக 2வது முறை பதவியேற்று நேற்றுடன் ஒராண்டு கால ஆட்சி சிறப்பாக நிறைவு பெறுகிறது. கடந்த ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் நலன், நாட்டு நலன் சார்ந்து தொலைநோக்குப் பார்வையோடு, துணிச்சலோடு, உறுதியோடு செயல்படுகிற பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து சிறக்கவும், வளமான பாரதம் படைக்கவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.