நியூயார்க்: அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜெனி ஸ்டெனாவை சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கியது. இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூப்பு காரணமாக, அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிடுவார் என்று கூட உறவினர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பாட்டியும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இதனால் மூன்று வார சிகிச்சைக்கு பிறகு ஜெனி ஸ்டெனா முழுமையாக குணமடைந்துள்ளார். கடைசியாக எடுத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் இல்லை என்று தெரியவந்தது.