×

சிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஜெயயை முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ததாக இதே கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கலியபெருமாள், முருகன்  ஆகியோரை திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவத்தில் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதை ஏற்று நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து சிறையில் உள்ள அதிமுக பிரமுகர்கள் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


Tags : AIIMS ,personalities , Girl, Burn Murder, Prime Ministers, 2 Gundas
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...