திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்ட நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில், சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், ஒய்எம்ஆர் பட்டியில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு 1,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, மைதா மாவு, சேமியா, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரணப்பையை வழங்கினார். இங்கு அரசின் உத்தரவை மீறும் வகையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டிருந்தது.