சென்னை: ஊரடங்கு காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா 500 வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் மவுரியா ஆஜராகி, மீன்பிடி தடைகாலத்தில் நாட்டுப் படகுகளை மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறும், ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்துக்கு தினமும் தலா 500 வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். அப்போது, தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் ெஜயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, தமிழகத்தில் உள்ள 13 கடற்கரையோர மாவட்டங்களில் 4 லட்சத்து 63,256 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடை காலத்திற்கு தலா 5ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.