×

மயிலாப்பூர் உதவி கமிஷனர் உட்பட 6 பேருக்கு தொற்று: குணமடைந்த 62 போலீசார் பணிக்கு திரும்பினர்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை கூடுதல் கமிஷனர் உட்பட 303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். அதில் 2 துணை கமிஷனர்கள் உபட்ட 101 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நோய் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மயிலாப்பூர் உதவி கமிஷனர் உட்பட மாநகர காவல் துறையில் நேற்று 6 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் உட்பட 6 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், உதவி கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய போலீசார் மற்றும் அவரது ஓட்டுனரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். அதன்படி சென்னை மாநகர காவல் துறையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஒருவர், 12 பெண் காவலர்கள் உட்பட 62 போலீசார் நேற்று பணிக்கு திரும்பினர்.



Tags : Assistant Commissioner ,Mylapore ,policemen , Mayalapur Assistant Commissioner, Corona, Curfew
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...