டெல்லி: விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விளையட்டு சங்கமும் சிறந்த வீரர்களின் பெயர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். விருதுக்கு தகுதியான நபர்தானா? என்பதை கண்டறிய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு நற்சான்றிதழ் அளித்தபின், மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 2016 ஜனவரில் இருந்து 2019 டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்க இருக்கிறோம்.