சென்னை: சென்னை மயிலாப்பூர் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து தற்போது மயிலாப்பூர் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் இருந்த காவலர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.