1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு : இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வியட்நாம் : இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணமாகும். இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா - வியட்நாம் இடையே இருக்கும் கலாச்சார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்.இது குறித்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம்,  இந்தியாவையும் வியட்நாமின் நாகரீக இணைப்பையும் அவர் பாராட்டினார்.இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கையின்படி, ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக கோயில்களை மீட்டெடுத்துள்ளது. இப்போது மூன்றாவது குழு கோவில்களில் வேலை செய்து வருகிறது.

Related Stories: