நெல்லை: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக நாடு முழுவதும், கடந்த ஒரு மாதமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு ரயில்களில் புறப்பட்டு சென்று விட்டனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ரயில்களில் வரும் தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு உள்ள சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதை தவிர்க்க ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புலம் பெயர் தொழிலாளர்களுக்காக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் பயணித்தவர்களில் சிலர், ஏற்கனவே உள்ள ஆரோக்கிய குறைவு காரணமாக துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.