ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் நகரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. சுற்று வட்டாரத்தில் கிராமப் பொதுமக்கள் அனைவரும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆர்.எஸ்.மங்கலம் தான் வரவேண்டும். இங்கு ஏராளமான தெரு நாய்கள் தெருக்களிலும், ரோடுகளிலும் சுற்றி திரிந்து அங்கும் இங்குமாக ஒடுவதால் குழந்தைகள் முதியவர்கள், குறிப்பாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் சைக்கிளில் செல்லும் போது நாய்கள் துரத்துகின்றது. இதனால் பல நேரங்களில் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. ஆகையினால் இந்த நாய்களின் உரிமையாளர்களே யார் என்று தெரியாமல் உள்ளது.