சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு தேவை என்று அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்திய அவர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வங்கிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.