பல்லாவரம்: பல்லாவரம் அருகே மதுபோதையில் சினிமா தியேட்டரை சூறையாடிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலையில் அனகாபுத்தூர் பகுதியில் சினிமா தியேட்டர் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாதங்களாக இந்த தியேட்டர் மூடிக்கிடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மது போதையில் அங்கு வந்த 3 பேர், தங்களுக்கு பிரத்யோகமாக சினிமா போட்டுக்காட்ட வேண்டும், என்று அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதற்கு பணியாளர்கள் மறுத்ததால், ஆத்திரமடைந்த மூவரும், அங்கிருந்த கற்களை எடுத்து சினிமா தியேட்டர் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.