சென்னை: மந்தைவெளி அம்மணி அம்மாள் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (66). முதுகலை பட்டதாரியான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர், வீட்டிலேயே 20 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதில் வரும் வருமானதில் வாழ்க்கை நடத்தி வந்தார். செங்கல்பட்டில் வசித்து வரும் இவரது தங்கை ராஜலட்சுமி அடிக்கடி இங்கு நேரில் வந்து பார்த்தும், செல்போனில் பேசி வருவதும் வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே மாதவன் முடங்கி கிடந்தார். கடந்த 26ம் தேதி முதல் மாதவனிடம் இருந்து எந்த செல்போன் அழைப்பும் ராஜலட்சுமிக்கு வரவில்லை.