கொரோனா பீதியால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்ப மரத்தடியில் வாலிபருக்கு சிகிச்சை

தென்தாமரைகுளம்: குமரி மாவட்டம் மணக்குடிக்கு வந்திருந்த கேரள வாலிபர்  உதயகுமார் என்பவருக்கு நேற்று முன்தினம் மாலை வயிற்று வலி மற்றும்  வாந்தி ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவரை அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு  சென்றனர். கொரோனா பீதி காரணமாக  மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேப்பமரத்தின்  அடியில் ஒரு பெஞ்சில் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: