லண்டன்: கொரோனா தொற்று பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகள் மீண்டும் ஆடுகளம் திரும்புகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் சற்று தணிந்துள்ள நிலையில், ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் போட்டிகளை நடத்த பல்வேறு நாடுகளின் அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இம்மாதம் முதல் வாரத்தில் பயிற்சிகள் செய்ய அனுமதிக்கப்பட்டது.ஐரோப்பிய கண்டத்தில் முதல் கால்பந்து போட்டியாக ஜெர்மனியில் பண்டெஸ்லிகா தொடர் மே 17ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடரில் இன்னும் 12 சுற்று போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் ஜூவெண்டஸ் அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.