புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நக்சலைட்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரத்த தானம் செய்து சிஆர்பிஎப் வீரர்கள் உதவி உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சிங்பும் மாவட்டத்தில் மான்மாரு-தெபோ வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக சிஆர்பிஎப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதியை அவர்கள் சுற்றிவளைத்தனர். அங்கு, போலீசாருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் சில நக்சலைட்கள் குண்டடிப்பட்டு காயமடைந்தனர்.