துபாய்: அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்துச் செல்ல தனியார் நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் தனி விமானங்களை இயக்க, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அனுமதி அளித்துள்ளது. தனி விமானங்களை ஏற்பாடு செய்யும் தனியார் ஏஜென்சிகள், சமூக அமைப்புகள், பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் விளக்கப்பட்டுள்ளது.
தனி (Charted ) விமானங்களுக்கான செலவு மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்காகன செலவு ஆகியவற்றை. தனி விமானத்தை வாடகைக்கு எடுக்கும் அமைப்பு அல்லது நிறுவனம் ஏற்க வேண்டும்.